/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காத்திருப்போர் கூடம் கட்டட பணி துவக்கம்
/
காத்திருப்போர் கூடம் கட்டட பணி துவக்கம்
ADDED : நவ 12, 2025 07:57 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பெரியப்பட்டு ஊராட்சியில், சிதம்பரம் சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 6 லட்சம் மதிப்பில் காத்திருப்போர் கூடம் கட்ட பூமி பூஜை விழா நடந்தது.
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். காத்திருப்போர் கூடம் கட்ட பூமி பூஜையை, பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தா ர்.
விழாவில், முன்னாள் ஊராட்சி தலைவர் அர்ச்சுனன், ஒன்றிய பொருளாளர் பாஸ்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அகிலநாயகி அருள்மணி, நிர்வாகிகள் ராதா கிருஷ்ணன், கல்யாணம், மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

