/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காத்திருப்போர் கூடம் : எம்.எல்.ஏ., திறப்பு
/
காத்திருப்போர் கூடம் : எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : ஜூலை 12, 2025 03:32 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை மீனவர் கிராமத்தில், சிதம்பரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட காத்திருப்போர் கூடம் திறப்பு விழா நடந்தது.
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தனர்.
கிராம தலைவர் நாகலிங்கம் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., காத்திருப்போர் கூடத்தை திறந்து வைத்தார்.
விழாவில், மாவட்ட அவை தலைவர் குமார், பரங்கிப்பேட்டை ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுதாகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் ராம் மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.