ADDED : பிப் 20, 2026 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், காத்திருப்பு போரா ட்டம் நடத்தினர்.
வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் நடந்த இப்போராட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, வட்ட பொருளாளர் கவுரி, வட்ட செயலாளர் சக்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் உட்பட பல்வேறு தாலுகா அலுவலகங்களிலும் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இதன் காரணமாக கிராம நிர்வாக அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

