ADDED : பிப் 26, 2026 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் உட்பட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 24ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது.
நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியது. விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு வட்டக் கிளை சார்பில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.
வட்ட பொருளாளர் ராஜதுரை, நிர்வாகிகள் சிவக்குமார், திருமால்வளவன், சிதம்பரபாரதி, வேல்சாமி, மணிமாறன், தேவராஜன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

