sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

/

 வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

 வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

 வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


ADDED : டிச 26, 2025 06:13 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக அதிகாரிகள் தண்ணீர் திறந்து வைத்தனர்.

திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில், வெலிங்டன் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 29.72 (2580 கனஅடி) அடியில், தற்போது 19.00 (846.77கனஅடி) அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நடப்பாண்டு விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன் முன்னிலையில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இணைந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தனர்.

தாசில்தார் உதயகுமார், உதவி செயற்பொறியாளர் பிரசன்னா முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் வெங்கடேசன் வரவேற்றார். உதவி பொறியாளர்கள் சுதர்சன், செந்தில்நாதன், வெலிங்டன் நீர்த்தேக்க பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் மருதாசலம், முன்னோடி விவசாயிகள் பரமசிவம், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

வினாடிக்கு 90 கன அடி வீதம், 90 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் திட்டக்குடி தாலுகாவில் உள்ள, 5 பாசன ஏரிகள் மற்றும் 21 கிராமங்களில் கீழ் மட்ட கால்வாய், 2 கிளை வாய்க்கால்கள் மூலம் 8268 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us