ADDED : நவ 03, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாரதி மகன் குருபிரசாத், 23; டிரைவர். இவரும், பிளஸ் 1 பயிலும் 16 வயது மாணவியும் காதலித்து வந்தனர். இந்நிலையில், குருபிரசாத், மாணவியை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.
அதன் பிற்கு மாணவியின் வீட்டிற்கு சென்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து குருபிரசாத்தை தேடி வருகின்றனர்.