/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
/
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : ஏப் 09, 2025 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி வரதராஜப்பெருமாள் கோவிலில் ராமநவமி முன்னிட்டு ராமர் - சீதாதேவி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோவிலில் ராமநவமி முன்னிட்டு நேற்று காலை 9:30 மணிக்கு உற்சவர் ராமர் - சீதாதேவிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 10:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு ராமர் - சீதாதேவி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு ராமர்-சீதாதேவி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.