ADDED : டிச 08, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் அகர்வால் அறக்கட்டளை மற்றும் சேவா பாரதி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால், கை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அகர்வால் அறக்கட்டளை சம்பத், சேவா பாரதி மாநில செயலாளர் கருணாகரன், கோட்ட ஒருங்கிணைப்பாளர் சபாஷ்ராஜ், ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரி உரிமையாளர்கள் ஆனந்த்குமார், விஜயகுமார், அரிஹந்த் மேத்தா, சித்தார்த், இன்ஜினியர் மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்று, விபத்தில் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என, 75 பேருக்கு செயற்கை கால், கை உபகரணங்கள் வழங்கினர். ஏற்பாடுகளை சேவா பாரதி மாவட்ட செயலாளர் பிரதீஷ்குமார், சண்முகசுந்தரம், தேவா செய்திருந்தனர்.

