ADDED : பிப் 15, 2026 06:08 AM

நெய்வேலி பிப். 15-: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட கீழக்குப்பம் ஊராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வேணுகோபால், கவிதா ஜனார்த்தனன், பண்ருட்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் பாலமுருகன், குப்புசாமி, அன்பழகன், இளங்கோ, மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், ஒன்றிய துணைச்செயலாளர் செல்வகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் அருள்முருகன், ஞானசேகர், டாக்டர் செந்தில், ஜெயக்குமார், ராமலிங்கம், கருணாநிதி, கணபதி சிவகடாட்சம், அன்பு, ராமச்சந்திரன், விஜயகுமார், பாக்கியராஜ், பழனி, குபேரன், நந்தகோபால், சிதம்பரம், சீதாராமன், ஞானசெல்வம், பொன்னம்பலம் சிவமுருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

