sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பழனிசாமி கூறுவது வேடிக்கை: அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

/

பழனிசாமி கூறுவது வேடிக்கை: அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

பழனிசாமி கூறுவது வேடிக்கை: அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

பழனிசாமி கூறுவது வேடிக்கை: அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

2


ADDED : ஜூன் 16, 2024 01:55 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 01:55 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுவது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயில் அருகே உள்ள கிராமத்தில் குவைத்தில் உயிரிழந்த சின்னத்துரையின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

திமுக ஆட்சியில் தான் அயலகத்துறை சிறப்பாக செயல்படுகிறது. விவசாயிகள் கோரிக்கை வைக்காமலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் குறுவை சிறப்பு தொகுப்பு வழங்க உத்தரவிட்டார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்திருப்பதே எங்களுக்கு முதல் வெற்றி.

இடைத்தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுவது வேடிக்கையாக உள்ளது. அவர்கள் ஏன் நிற்கவில்லை என்பது இன்னும் சில காலங்கள் கழித்தே தெரியும். தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதியிலும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் தேர்தல் நடந்துள்ளது. இதுவே மிக முக்கிய சாட்சியாகும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us