ADDED : ஏப் 26, 2025 05:37 AM
அ நிறம் | அளவு
பண்ருட்டி : மகனுடன், மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் அன்புராஜ்,32; கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி; இவரது மனைவி திவ்யா,25; இவர்களுக்கு அன்புநிலவன்,7; என்ற மகன் உள்ளான். அன்புராஜ் கடந்த பிப்.,11ம் தேதி கரும்பு வெட்ட வெளியூர் சென்றார்.
இரண்டு மாதம் கழித்து அவர் வீடு திரும்பிய போது, மகன் மற்றும் மனைவியை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
