ADDED : அக் 20, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி, : சமையல் வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற கணவர் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
திட்டக்குடி அடுத்த புலிவலம் காலனியைச் சேர்ந்தவர் சரவணன், 45, சமையல் வேலை பார்க்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம்தேதி சமையல் வேலைக்கு செல்வதாகக்கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி பொற்செல்வி அளித்த புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.