/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகன்களுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
/
மகன்களுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
ADDED : மே 08, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மனைவி, மகன்கள்காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
நடுவீரப்பட்டு அடுத்த பரிசமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்பாலமுருகன்,26; இவரது மனைவி சுவாதி, 24. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த 5ம் தேதி மதியம் வீட்டிருந்த சுவாதி, இரண்டு மகன்களையும் கூட்டிக்கொண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் 3 பேரையும் காணவில்லை. புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து சுவாதி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.