ADDED : செப் 13, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
நடுவீரப்பட்டு, புதுநகரை சேர்ந்தவர் பாலமுருகன்,38; இவரது மனைவி குடியரசி,34; கடந்த 6ம் தேதி பாலமுருகன் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார்.
அப்போது, குடியரசி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்து பால முருகன் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து குடியரசியை தேடி வருகின்றனர்.