ADDED : செப் 20, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : மது அருந்தியதை மனைவி தட்டிக் கேட்டதால் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை,41; விவசாயி. இவர், கடந்த 12ம், மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி பரிமளா மேரி கண்டித்தார். இதனால் மனமுடைந்த ராஜதுரை, வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், குடும்பத்தினர் மீட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோழதரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.