sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காட்டுப்பன்றியால் நெற்பயிர்கள் சேதம்

/

காட்டுப்பன்றியால் நெற்பயிர்கள் சேதம்

காட்டுப்பன்றியால் நெற்பயிர்கள் சேதம்

காட்டுப்பன்றியால் நெற்பயிர்கள் சேதம்


ADDED : ஜன 02, 2025 06:48 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்; பெண்ணாடம் பகுதியில் சம்பா நெல் சாகுபடி செய்த வயல்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில், சம்பா நெல் நடவுப்பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். தற்போது 2 மாதங்கள் முடிந்த நிலையில் நெற்பயிர்களில் கதிர்கள் விட்டுள்ளன. வரும் ஜனவரி மாதத்தில் அறுவடை பணி துவங்க உள்ளது.

பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான திருமலைஅகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், பெ.பூவனுார், ஓ.கீரனுார், அரியராவி, இறையூர், கொத்தட்டை, காரையூர், தாழநல்லுார் கிராமங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள சம்பா நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துகின்றன. இதனால் மகசூல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சம்பா நெல் வயல்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால், வேளாண், வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, பெண்ணாடம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us