sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்படுமா?

/

கடலுாரில் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்படுமா?

கடலுாரில் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்படுமா?

கடலுாரில் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்படுமா?


ADDED : ஜன 23, 2025 08:09 AM

Google News

ADDED : ஜன 23, 2025 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுாரில் விளையாட்டு வீரர்களின் உடல் இயக்க ஆய்வுகளை கருவிகள் மூலம் கண்டறிந்து திறனை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் அமைக்க வேண்டும்.

விளையாட்டு அறிவியல் மையம் என்பது விளையாட்டு வீரர்களின் திறன்களை கண்டறியவும், அவரவர் உடல் திறனுக்கேற்ற மருத்துவ ஆலோசனைகள் வழங்கி திறனை மேம்படுத்த உதவும் மையமாகும்.

விளையாட்டு வீரர்களின் இதயத்துடிப்பு, உயரம் தாண்டுதல், ஓட்டத்திற்கான வேகம், தாவி குதித்தல் போன்ற பல்வேறு திறன்களை கண்டறியும் வகையில் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விளையாட்டு அறிவியல் மற்றும் கல்வி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஓட்டப்பந்தய வீரர்களின் திறனை பரிசோதிக்கும் ஸ்பெக்ட் அனலைசர், வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, நீளம், உயரம் தாண்டுதல் விளையாட்டுகளில் முக்கியமான தாவிகுதிக்கும் திறனை பரிசோதிக்க போர்ஸ் பிளேட், வீரர்களின் கை, கால் தசை, உடலின் பிற தசை இயக்கங்கள், தசைகளின் வலிமையை கண்டறிய கினோ மீட்டர், வீரர்கள் ஓடும்போது இதயத்துடிப்பைக் கண்டறிய டிரெட் மில் போன்ற நவீன கருவிகள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்கும்.

இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் தங்களது பலம், பலவீனத்தை அறிந்து விளையாட்டு திறனை மேம்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

விளையாட்டு அறிவியல் மையங்கள் தனியார் கல்விநிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ளன. இவற்றை கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. கடந்த 2018ல் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் கட்டப்பட்டது.

எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு இக்கருவிகளை இயக்கி அவர்களின் செயல்பாடு கண்டறியப்பட்டு, திறனை மேம்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பயிற்சியாளர்கள் கூறுகையில், சென்னை, மதுரை மற்றும் ஊட்டி பகுதியில் விளையாட்டு அறிவியல் மையங்கள் இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் திறனை மெருகேற்றிக்கொள்கின்றனர்.

அதைப்போல கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த இளம் விளையாட்டுவீரர்களின் நலனை கருத்தில் கொண்டு, கடலுார் அல்லது மையமான ஒரு இடத்தை தேர்வு செய்து விளையாட்டு அறிவியல் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us