sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர் பாதுகாப்பு குழு செயல்பாட்டுக்கு வருமா

/

மாணவர் பாதுகாப்பு குழு செயல்பாட்டுக்கு வருமா

மாணவர் பாதுகாப்பு குழு செயல்பாட்டுக்கு வருமா

மாணவர் பாதுகாப்பு குழு செயல்பாட்டுக்கு வருமா


ADDED : ஜன 22, 2025 09:46 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 2021ல் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு துவங்க அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தலா இருவர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியர் அல்லாத பணியாளர் ஒருவரை உறுப்பினர்களாக கொண்டு அமைக்க அரசு அறிவுறுத்தியது.

இந்த குழு, தங்களுக்கு வரும் புகார்களை, அதற்கென அமைக்கப்பட்ட மாநில கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். புகார்களின் தன்மை பொருத்து, அதுசார்ந்து பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்கும் வகையில், இந்த குழு செயல்பாடு இருக்கும்.

இந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களில், மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு துவங்கப்பட்டதாக ஏட்டளவில் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு, செயல்படாத ஒரு அமைப்பாக மாறிவிட்டதாக கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறுகையில், பள்ளி மேலாண்மை குழுவையே, மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு என, பலர் நினைத்து கொள்ளும் நிலை உள்ளது. விழுப்புரம் தனியார் பள்ளியில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 4 வயது மாணவி கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்தார். அதுபோல பள்ளி வளாகத்திலேயே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அளிக்கப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது. எனவே, மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழுவை செயல்படக்கூடியதாக மாற்றினால் மாணவ, மாணவியர் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் என்றார்.






      Dinamalar
      Follow us