ADDED : ஆக 24, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையிலான போலீசார் நேற்று காலை, கோரணப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி, 55; என்பவர் வீட்டில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து முத்துலட்சுமியை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

