sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காதல் திருமணம் செய்த பெண் 6 மாதத்தில் தற்கொலை

/

காதல் திருமணம் செய்த பெண் 6 மாதத்தில் தற்கொலை

காதல் திருமணம் செய்த பெண் 6 மாதத்தில் தற்கொலை

காதல் திருமணம் செய்த பெண் 6 மாதத்தில் தற்கொலை


ADDED : நவ 08, 2025 01:56 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் பாலா மனைவி விஜயராணி, 20; கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இருவருக்கும் காதல் திருமணம் நடந்தது.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி, குடும்ப பிரச்னை காரணமாக விஜயராணி, எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில், நேற்று மதியம், 1:30 மணியளவில் விஜயராணி உயிரிழந்தார்.

விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அதில், திருமணமாகி 6 மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us