sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிணற்றில் விழுந்த பெண் பலி

/

கிணற்றில் விழுந்த பெண் பலி

கிணற்றில் விழுந்த பெண் பலி

கிணற்றில் விழுந்த பெண் பலி


ADDED : செப் 16, 2025 11:54 PM

Google News

ADDED : செப் 16, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி; கிணற்றில் தவறி விழுந்த பெண், நீரில் மூழ்கி இறந்தார்.

குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளம் காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கர், 44; இவரது மனைவி சத்தியவாணி முத்து, 42; இவர், குறிஞ்சிப்பாடி, பெரியார் நகரில் உள்ள ஒருவர் வீட்டில் வேலை செய்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர், வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் மீது ஏறி குப்பையைக் கொட்டினார். அப்போது கிணற்றின் மேல் இருந்த கடப்பா கல் உடைந்து, 40 அடி ஆழமுள்ள கிணற்றின் உள்ளே விழுந்த அவர் நீரில் மூழ்கினார்.

தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று சத்தியவாணி முத்துவை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.

குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us