/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி
/
பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி
ADDED : ஜூலை 15, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பைக்கில் சென்ற பெண் வேகத்தடையில் தவறி விழுந்து இறந்தார்.
பண்ருட்டி அடுத்த காவனுாரைச் சேர்ந்தவர் அருணாசலம். இவர், கடந்த 1ம் தேதி மனைவி மகாலட்சுமி, 55; அழைத்துக் கொண்டு பைக்கில் சென்று சென்றார். ஒறையூர் ஊராட்சி சாலை வேகத்தடையில் ஏறி இறங்கிய போது திடீரென பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்ததில், மகாலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.