/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக்கிலிருந்துதவறி விழுந்த பெண் பலி
/
பைக்கிலிருந்துதவறி விழுந்த பெண் பலி
ADDED : அக் 20, 2025 09:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் இறந்தார்.
புதுச்சத்திரம் அடுத்த ஆதிநாராயணபுரத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி மனைவி காந்திமதி,50; இவர் தனது மகன் அருண், 28; பேத்தி ரித்திகா, 9; ஆகியோருடன் பைக்கில் குள்ளஞ்சாவடிக்கு சென்று கொண்டிருந்தார்.
பெருமாள் ஏரிக்கரை ரோட்டில் செல்லும் போது, பைக் நிலைதடுமாறியதில் மூவரும் கீழே விழுந்தனர். காயமடைந்த மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், காந்திமதி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

