ADDED : நவ 23, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே கீழே விழுந்ததில் காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோதண்டராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி சாந்தி,47; கடந்த, 4 மாதங்களுக்கு முன் வீட்டின் முன் விழுந்ததில் சாந்திக்கு வயிற்றில் பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 18ம் தேதி வயிற்றில் வலி அதிகமடைந்ததால், சிகிச்சைக்காக விழுப்புரம்முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடந்த 21ம் தேதி, மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லிக்கு கொண்டு சென்றனர்.பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்துவிசாரிக்கின்றனர்.

