ADDED : ஜன 13, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பெரியபுறங்கனி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்; டிரைவர். இவரது மனைவி மீனாட்சி,32. இவர் நேற்று காலை 5:45 மணியளவில் காடாம்புலியூர் தாமரைக்குளம் அருகில் பால் வாங்குவதற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக குறிஞ்சிப்பாடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் டி.என்.32.என்.4007 மோதி மீனாட்சி படு காயமடைந்தார்.
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.