ADDED : பிப் 15, 2024 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் பெட்டிக் கடையில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த பச்சையாங்குப்பத்தில் உள்ள பெட்டிக்கடையில், கடலுார் துறைமுகம் சப் இன்ஸ்பெக்டர் சிவகாமி சோதனை செய்தார். அங்கு, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து, கடை உரிமையாளர் சசிக்குமார் மனைவி லட்சுமி, 36; என்பவரை கைது செய்தனர்.