ADDED : நவ 21, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: பெண்ணை தாக்கி, மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த ராசாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி தீர்த்தலட்சுமி, 49; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலய்யன், 41; என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த, 13ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த வேலய்யன், தீர்த்தலட்சுமியை அசிங்கமாக திட்டி தாக்கி, மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, வேலய்யனை கைது செய்தனர்.

