sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கலெக்டர் ஆபீசில் பெண் தர்ணா 

/

கலெக்டர் ஆபீசில் பெண் தர்ணா 

கலெக்டர் ஆபீசில் பெண் தர்ணா 

கலெக்டர் ஆபீசில் பெண் தர்ணா 


ADDED : நவ 28, 2024 06:54 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வீட்டை காலி செய்யு மாறு மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலுாரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி பார்வதி. இவர், தனது குடும்பத்துடன் கடலுார் கலெக்டர் அலு வலகத்தில் நேற்று மாலை கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில், எனக்கு சொந்த மாக வீடு உள்ள இடத்தில் பஞ்சாயத்து கட்டடம் கட்ட வேண்டுமெனக் கூறி சிலர் வீட்டை காலி செய்யுமாறு கூறுகின்றனர். இல்லையெனில் வீட்டை இடித்து பட்டாவை ரத்து செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீட்டுத் தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கோரிக்கை மனு அளித்து விட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us