sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்

/

பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்

பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்

பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்


ADDED : மே 24, 2025 11:47 PM

Google News

ADDED : மே 24, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க கல்வித்துறை அதிகாரிகள் விரிவான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, பள்ளிகள் திறக்கப்படும் நாளில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநுால் கழகத்தால் பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாவட்டம் வாரியாக முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து பள்ளிகளுக்கு பாட புத்தங்கள் அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

கடலுார் வருவாய் மாவட்டத்தில் கடலுார் மற்றும் விருத்தாசலம் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளது. கடலுார் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 537 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 153 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டு, அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us