sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் தீவிரம்: நவீன மயமாகும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்

/

நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் தீவிரம்: நவீன மயமாகும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்

நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் தீவிரம்: நவீன மயமாகும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்

நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் தீவிரம்: நவீன மயமாகும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்


UPDATED : ஜன 08, 2026 10:23 PM

ADDED : ஜன 08, 2026 05:58 AM

Google News

UPDATED : ஜன 08, 2026 10:23 PM ADDED : ஜன 08, 2026 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக அடிப்படை, நவீன வசதிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நீளமான கடற்கரை கடலுார் சில்வர் பீச். மாநகராட்சியின் எல்லைக்குள் தமிழகத்தின் புகழ்பெற்ற கடற்கரை பகுதிகளில் ஒன்றாக, இந்த கடற்கரை அமைந்துள்ளது.

கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஆசியாவின் மிக நீளமான கடற்கரை பகுதிகளில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.

இது புகழ்பெற்ற கடல்மீன்களின் விற்பனைப் பகுதியாகவும், சிறுதொழில்கள் நிறைந்த பகுதியாக உள்ளதாலும், புகழ்பெற்ற சுற்றுலா தளங்கள் நிறைய அமைந்துள்ளதாலும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் பொருந்திய கடற்கரைக்கு உள்ளூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையினை மேலும் ஈர்த்திடும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதோடு, நீலக்கொடி சான்று பெறும் பணிகளும் தற்போது தீவிரப்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்த கடற்கரையில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக அழகிய கண் கவர் நடைபாதைகள், பூங்கா, கடற்கரையில் ஓய்வெடுக்கும் பெஞ்சுகள், இயற்கை காற்றுவாங்கவும், ரசிக்கவும் தேவையான இருக்கைகள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமான கழிவறைகள், உடை மாற்றும் வசதிகளுடன் கூடிய குளியலறை, சூரிய ஆற்றல் உதவியுடன் இயங்கக்கூடிய வகையில்

மின்சார வசதிகள், ஓய்வெடுக்கும் பூங்காக்கள், விழாக்கள் நடத்தக்கூடிய மேடை அமைப்புகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மின்கம்பத்துடன் கூடிய அலங்கார மின் விளக்குகள், பாதுகாப்பு வசதிக்காக 4 கண்காணிப்பு கேமராக்கள், மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்லும் வகையில் பிரத்யேக நடைபாதை வசதி, மூங்கில் வளைவுகளுடன் கூடிய உட்காரும் நாற்காலிகள், மூங்கிலால் ஆன நிழற்குடைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சாமியார்பேட்டை கடற்கரை நீலக்கொடிக்கு தகுதி பெறுமா?


தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழகத்தில் சென்னை திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம், விழுப்புரம் மாவட்டம் புத்துப்பட்டு, கடலுார் மாவட்டம் சாமியார்பேட்டை ஆகிய 6 கடற்கரைகளுக்கு, துாய்மையான கடற்கரை என்பதற்கான நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க, 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாமியார்பேட்டை கடற்கரைக்கு, துாய்மையான கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழ் பெறும் அரசின் அறிவிப்பு, சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.








      Dinamalar
      Follow us