ADDED : அக் 07, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டியில் மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் தொழிலாளி இறந்தார்.
கடலுார் அடுத்த பூவாணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 42; சென்ட்ரிங் தொழிலாளி.
இவர், நேற்று பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பிற்பகல் 2:45 மணியளவில் கம்பி அறுக்கும் மிஷினில் கம்பி அறுத்த போது பிரபாகரன் மீது மின்சாரம் தாக்கியது. உடன், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரபாகரன் இறந்தார்.
பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.