நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : கோவில் கும்பாபிஷேக பந்தல் அமைக்கும் போது தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோவில் கும்பாபிேஷகம் இன்று (4ம் தேதி) நடக்கிறது.
இதற்காக நேற்று முன்தினம் கோவிலில் பந்தல் அமைக்கும் பணியில் நல்லாத்துார் அடுத்த மணவெளியைச் சேர்ந்த ராஜா, 58; ஈடுபட்டார்.
இவர், சாரம் கட்டிய போது ராஜா மேலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்றிரவு அவர் இறந்தார்.
புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.