நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்,; கடலுார் அடுத்த திருமாணிக்குழியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்,50; கூலித்தொழிலாளி. தினமும் குடித்து விட்டு, சம்பளத்தை வீட்டில் கொடுக்காததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி, மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை, மனைவி சுந்தரி தட்டிக்கேட்டார்.
ஆத்திரமடைந்த கிருஷ்ணன், பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.