ADDED : ஜன 25, 2024 04:22 AM
அ நிறம் | அளவு
கடலுார் : கடலுார் அடுத்த சொத்திக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயபாலன், 40; மீனவர்.
இவர், சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை, அவரது மனைவி சுபஸ்ரீ கண்டித்துள்ளார். மேலும், கோபித்துக்கொண்டு புதுச்சேரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் ஜெயபாலன், மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். வரமறுத்ததால், மனமுடைந்த ஜெயபாலன், சொத்திக்குப்பம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
