நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே வயிற்றுவலி காரணமாக கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்,47; கூலி தொழிலாளி; இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதுண்டு. நேற்று முன்தினம் வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடன் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இறந்தார்.
பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

