நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; வயிற்று வலி காரணமாக தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன்,34; தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி சத்தியவாணி அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.