நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: குடும்பத் தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த சூரக்குப்பத்தைச் சேரந்தவர் முருகையன் மகன் கோபி;30; ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி பவானி. தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்டதால் பவானி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால், மன உளைச்சலில் இருந்த கோபி கடந்த 8ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடன், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.