நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம், சண்முகா நகரை சேர்ந்தவர் கவிபாலன்,32; விவசாய கூலி தொழிலாளி. இவர், வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது.
நேற்று வழக்கம் போல் மது அருந்தி வந்த கவிபாலனை, மனைவி கண்டித்தார்.
இதனால், மனமுடைந்த கவிபாலன், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.