நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி,; புவனகிரியில் குடும்ப பிரச்னையில் நகை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன்,52; இவர் புவனகிரி கடைவீதியில் நகை செய்யும் மற்றும் நகை பாலிஷ் செய்யும் கடை வைத்துள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட இவர் நேற்று முன் தினம் இரவு மதுவில் நகை பாலிஷ் செய்ய கடையில் வைத்திருந்த சயனைடு கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.