நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே குடும்ப பிரச்னையில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அருகே பூதவராயன்பேட்டை கிராமத்தை சேர் ந் தவர் இளங்கோவன்,70; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி தம்பதியினர் இடையே பிரச்னை ஏற்படுவது வழக்கம். கடந்த இரு தினங்களுக்கு முன் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தியடைந்த இளங்கோவன் விஷம் கு டித்து மயங்கி கிடந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.