நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த தொழி லாளி உயிரிழந்தார்.
புவனகிரி அருகே பூதவராயன்பேட்டை, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத்,65; கூலித்தொழிலாளி.
இவர், அடிக்கடி குடித்து விட்டு வந்ததை அவருடைய மனைவி தேவி கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த, 13ம் தேதி மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் விரத்தியடைந்தவர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார். புவனகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

