நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் திருக்குறள் வாழ்வியல் சங்கம் சார்பில் திருக்குறள் பயிலரங்கம் நடந்தது.
புவனகிரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நி கழ்ச்சியில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
அன்பழகன் வரவேற்றார். கோட்ட ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் 'ஏன் திருக்குறள் வேண்டும்' என்ற தலைப்பில் பேசினார். அன்பழகன் திருக்குறள் குறித்து பேசினார்.
விழாவில், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கதிரவன் நன்றி கூறினார்.