ADDED : மார் 22, 2025 08:42 PM
அ நிறம் | அளவு
வேப்பூர், : வேப்பூர் பிரைம் இன்டர்நேஷ்னல் சீனியர் சி.பி.எஸ்.ஈ., பள்ளியில் உலக காடுகள் தினம் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேப்பூர் வன காப்பாளர் சஞ்சீவ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாக இயக்குனர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அதில், மரக்கன்றுகளின் அவசியம், அதன் மூலம் நடக்கும் இயற்கை சுழற்சிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின், வேம்பு, புங்கை உட்பட பல்வேறு மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டு வைத்தனர்.
