sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சொக்கப்பனை ஏற்றி  கோவில்களில் வழிபாடு 

/

சொக்கப்பனை ஏற்றி  கோவில்களில் வழிபாடு 

சொக்கப்பனை ஏற்றி  கோவில்களில் வழிபாடு 

சொக்கப்பனை ஏற்றி  கோவில்களில் வழிபாடு 


ADDED : டிச 14, 2024 05:58 AM

Google News

ADDED : டிச 14, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாநகரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில்களில் சொக்கப்பனை ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.

கார்த்திகை தீப விழாவையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடலுார் மாநரில் பொது மக்கள் தங்கள் வீட்டு வாசலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி சுவாமியை வழிபாடு செய்தனர்.

கார்த்திகை தீபத்தையொட்டி கடலுார் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர், வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன் உட்பட பல்வேறு கோவில்களின் முன்பு சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்யப்பட்டது. சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். சிறுவர்கள், இளைஞர்கள் மாவளி சுற்றி மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us