ADDED : ஜூன் 23, 2025 09:27 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் ராணி சீதையாச்சி மேல்நிலை பள்ளியில் உலக யோகா தின விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பேர்லி வில்லியம் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியை சுடர்விழி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் முருகவேல், சுரேஷ், என்.சி.சி ஆசிரியர் ராஜசேகர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர் ஊழியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
