sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

105 கிலோ குட்கா பதுக்கல் வடலுாரில் வாலிபர் கைது

/

105 கிலோ குட்கா பதுக்கல் வடலுாரில் வாலிபர் கைது

105 கிலோ குட்கா பதுக்கல் வடலுாரில் வாலிபர் கைது

105 கிலோ குட்கா பதுக்கல் வடலுாரில் வாலிபர் கைது


ADDED : ஜன 19, 2025 06:29 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வடலுாரில், 105 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த பொறியியல் பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வடலுார் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் நேற்று மதியம், கடலுார் சாலையில் உள்ள அய்யன் ஏரி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே ஸ்கூட்டியில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் வடலுார் ஞானப்பிரகாசம் தெருவை சேர்ந்த வின்சென்ட் மகன் விக்னேஷ்,27, முதுகலை பொறியியல் பட்டதாரி என தெரிந்தது. அவருடைய வீட்டில் சோதனை மேற்கொண்டதில் 7 மூட்டைகளில் 105 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 2.50 லட்சமாகும்.

இதுகுறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விக்னேைஷ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us