ADDED : டிச 28, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அருகே பைக்கில் சென்ற வாலிபர் மீது அரசு பஸ் மோதி காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பண்ருட்டி அடுத்த பேர்பெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் கார்த்திக்,25. டிப்ளமோ படித்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் காலை நெய்வேலியைச் சேர்ந்த அவரது நண்பர் கிருஷ்ணகுமாருடன், கே.டி.எம்., பைக்கில் கடலுாருக்கு வந்தனர். பைக்கை கிருஷ்ணகுமார் ஓட்டிவந்தார்.
கடலுார் முதுநகர் சிவானந்தபுரம் அருகே வந்தபோது, பின்னால் வந்த அரசு பஸ் மோதி கீழே விழுந்த கார்த்திக்கின் இடுப்பில் பஸ் ஏறியது.
காயமடைந்த கார்த்திக் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.