ADDED : ஆக 26, 2025 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : மொபட்டின் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
கடலுார் முதுநகர் அடுத்த சோனாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ்,35; இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் செல்லங்குப்பம் இரட்டைரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ், மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சரண்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.