ADDED : செப் 16, 2026 11:43 PM
பெண்ணாடம், செப். 17–
பெண்ணாடம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் – திருச்சி ரயில் பாதையில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 10:30 மணியளவில் 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயில் பாதையொட்டி, இறந்து கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
இறந்தவரின், சட்டை பையில் சென்னையில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் காரைக்குடி செல்ல 2 நபர் உள்ள டிக்கெட் இருப்பது தெரிந்தது. உடன் வந்த மற்றொருவர் யார் என விசாரிக்கின்றனர். இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
