sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை

/

சிதம்பரம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை

சிதம்பரம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை

சிதம்பரம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை


ADDED : ஏப் 17, 2025 06:46 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பம் அருகே மனைவியை தவறாக பேசியதால், இளைஞரை வெட்டி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் மேலமூங்கிலடி கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் வினோத்குமார், 24; இவருக்கு, கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், வேளக்குடியை சேர்ந்த பாலகணேஷ், 22; என்பவர், வினோத்குமார் மனைவியை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது.

திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட பாலகணேஷ், தற்போது ஜாமினில் வந்துள்ளார். அவர், கடந்த 13ம் தேதி, மேலமூங்கிலடியில் உள்ள வினோத்குமார் வீட்டிற்கு வந்து, அவரது மனைவி பற்றி தவறாக பேசியுள்ளார்.மனைவி பற்றி தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த வினோத்குமார், தனது நண்பர்கள் 5 பேருடன் வேளக்குடி சென்று பாலகணேஷிடம் பேசி, அழைத்து சென்று மது வாங்கிக்கொடுத்துள்ளனர்.

போதை தலைக்கேறியதும் அங்குள்ள வெள்ளாற்றங்கரையில் கை, கால்களை கட்டி வைத்து அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் பாலகணேஷை கொலை செய்துள்ளனர்.

தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீல் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி., லாமேக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து, வினோத்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது, சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, வினோத்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us